states

img

ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப் பதிவு!

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது ஆந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆந்திரா முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி தொண்டர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெகன் மோகனின் கார் ஓட்டுநர் ரமண ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில், ஜெகன் மோகன் உதவியாளர் நாகேஸ்வர் ரெட்டி, முன்னாள் எம்.பி சுப்பா ரெட்டி, முன்னாள் அமைச்சர் விடதலா ரஜினி, முன்னாள் எம்.எல்.ஏ பேர்னி நானி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.